ஒரு மௌனப் புன்னகையில் உன் இதழ்கள் விரிந்தால்

ஒரு வானவில்லைப் போல் வளைந்து நின்றால்
நிறங்களுக்கு அழகு
ஒரு சோலைக்குயில் போல் கூவினால்
பாடும் பாடலுக்கு அழகு
ஒரு மாலைத் தென்றலில் கலைந்தாடினால்
உன் கூந்தலுக்கு அழகு
ஒரு மௌனப் புன்னகையில் உன் இதழ்கள் விரிந்தால்
என் இதயத்திற்கும் கவிதைக்கும் அழகு !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Feb-20, 6:33 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 121

மேலே