எத்தனை பிறவி எடுத்தாலும்

நீ பூக்கும்வரை உன்னை பாதுகாத்து

பூத்தப்பின் உன்னை தலையில் சுமந்து

யாரும் உன்னை காயப்படுத்த கூடாதென

முள்வேலியிட்டு பாதுகாத்தாலும்

பிரிவதுதான் உனக்கு வாடிக்கை என்றால்

ரோசா இதழ்களே காம்பாய் உன்னைத் தாங்குவேன்

எத்தனை பிறவி எடுத்தாலும்

எழுதியவர் : நா.சேகர் (25-Feb-20, 9:26 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 318

மேலே