மனதை துளைத்த மகளின் கேள்வி

அப்பா - நீங்கள்
தினமும் - கதை எழுதிவிட்டு
தூங்க செல்கீறீர்கள்....

ஆனால் - ஒருநாளாவது
எனக்கு மழலைக் கதை சொல்லி
தூங்க வைத்தது உண்டா...?

என்ற என்மகளின் கேள்வியில்
என்மகளின் சுட்டித்தனம் மட்டுமல்ல
என்மகளின் கெட்டிக்காரத்தனமும் சேர்ந்து
என்தலையில் கொட்டியதுபோலிருந்தது...

சிலநேரங்களில் -
நமது அறியாமை
நமது பிள்ளைகளால் கற்பிக்கப்படும்...!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (7-Mar-20, 11:40 am)
பார்வை : 235

மேலே