தமிழே நீ

உயிராக உறவாக உணர்வாக உறைந்தாய்
உள்ளத்தின் ஊற்றாகி உதிரத்தில் கலந்தாய்!
உயர்வாக நிறைவாக வாழவழி செய்தாய்
உரமாக வலுகூட்டி வற்றாமல் நெய்தாய் !
பயிருக்கு மழைபோலும் வளமூட்டிக் காத்தாய்
பயில்வோர்க்குப் பண்போடு பகுத்தறிவும் சேர்த்தாய் !
தயவோடு தாயன்பில் தாங்கியெமை வளர்த்தாய்
தமிழேநீ இத்தரணி உள்ளளவும் வாழி!!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-Mar-20, 2:04 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 44

மேலே