சிவம் தெரியும்

உனக்கு ளிருக்கு மிறையவனை
உணர்ந்து கொள்ள விதுதருணம் !
தனிமை கிடைத்த வரமாக
தமிழே நாளுந் துணையாக
மனத்தின் அழுக்கைத் துடைத்துவிட்டு
மௌன மாக வுள்நோக்க
அனைத்து மடங்கி யமைதியிலே
அன்பு கனிந்து சிவம்தெரியும் !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (30-Mar-20, 1:35 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 44

மேலே