சிறந்த பாடம்

யாரோ ஒருவர் செய்த தவறுக்கு
உலகிற்கே தண்டனை கொடுத்தது
கொரோனா....

சாதி மதம் பாராமல்...
உயர்வு தாழ்வு பாராமல்....
சமத்துவ நீதியை வழங்கி இருக்கு
ஓர் வைரஸ்!

வாக்கு பெற்று
அதிகாரத்தை கைப்பற்றி
என்ன செய்ய?
அரசியல்வாதிகளால்
மூடமுடியாத மதுபானக்கடைகளை
மூடிவிட்டது கொரோனா

மரணபயம் என்றால் என்னவென்று
காட்டிவிட்டது மனிதகுலத்திற்கே!
இல்லையென்றால்
வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பானா மனிதன்?

இத்தண்டணை தேவைதான்
இயற்கைக்கு மாறாய் செயல்படும்
அனைவருக்கும் மிகச் சிறந்த பாடம்

தனிமனித ஒழுக்கத்தில்தான் இருக்கிறது
21 நாட்கள் என்பதும்
அதற்கு மேலும்....

எழுதியவர் : கிச்சாபாரதி (2-Apr-20, 11:43 am)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : sirantha paadam
பார்வை : 188

மேலே