அல்லல் நீங்கட்டும்

பொறுப்பு
காரணமாக
அரசாணை
பிறப்பித்து
இல்லத்தில்
அடைந்து
இருக்கக்
கூறினால்
அதனை
அடக்குமுறை
என்பர் !

அச்சத்தின்
காரணமாக
அவரவர்
தன்னுயிர்க்
காத்திட
வீடுகளில்
தஞ்சம்
புகுந்து
முடங்கி
இருந்தால்
அதையே
அடங்குமுறை
என்பர் !

எதுவாகினும்
அடக்குவதோ
அடங்குவதோ
அல்லல் நீங்கி
இல்லம் திறந்து
இதயம் குளிர்ந்து
இயல்பு நிலைக்கு
மீண்டும் வந்திட
விழைகிறேன் !

பழனி குமார்
09.04.2020

எழுதியவர் : பழனி குமார் (9-Apr-20, 3:37 pm)
சேர்த்தது : பழனி குமார்
Tanglish : allal neengattum
பார்வை : 248

மேலே