அகிலமே அன்னையின் மடியில்
வசமில்லா
வாழ்க்கையும்
வசந்த
காலமாகும்
தாயின்
அருகினிலே
வசந்தகால
வாழ்க்கையும்
வாடியே
போகும்
தாயில்லா
தருணத்திலே
தனிமையின்
தாக்கங்கள்
தகர்ந்தே
போகும்
தாயுள்ளத்
தருணத்திலே
ஆண்டவனின்
அருளும்
அற்புத
பரிசாகும்
அன்னையின்
அன்பாலே
இன்பத்தில்
இசையும்
இதய
ஓலியாகும்
தாயின்
ஈர்ப்பாலே
அழகிய
காதலும்
அளவில்லா
நிலையடையும்
தாயின்
உள்ளத்தாலே
புன்னகை
தேகமும்
பூங்காற்றின்
வசமாகும்
அன்னையின்
அகத்தாலே
மழலையின்
குரலும்
அழகாய்
கவிபாடும்
அம்மாவின்
பாசத்திலே
அன்பென்ற
சொல்லும்
கவியாய்
பிறப்பெடுக்கும்
அன்னையின்
மடியிலே
கருமை
நினைவுகளும்
நிலவின்
ஒளியாகும்
தாயின்
சொல்லாலே
...அன்பின் உருவான
என் அன்னைக்கே
இவ்வரிகள் சமர்ப்பணம்...