Kangana Ranaut poem about mom , mothers day

தாய்மை
------------------

உன் சிந்தையில் நான் உதித்தபோது
உன் வாழ்வுக்கான அர்த்தமாய் என்னை எண்ணினாய்...
கருவாய் நான் ஜனித்துபோது
அதை விழிஒளியால் விவரித்தாய் நீ
உன் சுவாசம் என் உயிர்மூச்சாய்
உன் போஜனம் என் உடல் வளர்ச்சியாய்
ஒருநாள் உன்னிலிருந்து என்னை பிரித்து
உலகோடு சேர்த்து விட்டாய்
உன்னில் ஒரு திவலை
உன்னை போல் ஓர் மழலை
உனக்கு வெளியிருந்த படி
உன்னையே தேடி அலைந்தபடி
உலகையே அளந்து முடித்தேன்
எதிலுமே காணவில்லை
அந்த கணிவும் கருவறை வெப்பமும்
இறுதியாய் இறங்கினேன் இதயத்தினுள்...
அறிந்தேன் அவ்விட்ம் என் அன்னையை
உயிர்க்கான ஆசையும் ஏக்கமுமாய்...
என்னுள் இருந்தாய் நீ...
உன் வாழ்வின் அர்த்தமாய் நான்

எழுதியவர் : (19-May-20, 6:17 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 58

மேலே