காதல் கடிதம்

இணையம் வழி கைநீட்டி...
இதயம் கொடு எனக்கேட்டு...

எண்களே இணையத்தின் இதயமென...
எண்களை இருவரும் இடமாற்றி...

புலனம் வழி
புதுப்பிறவி கொண்டு

இரவுபகல் அதையே
விழிகள் கண்டு...

இதுவே காதலென
வாழும் காலத்தில்...

கடிதமும்...
கவிதையுமாய்...
இவள்...

எழுதியவர் : இரா.இரஞ்சித் (10-Jun-20, 10:48 am)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : kaadhal kaditham
பார்வை : 631

மேலே