புரியாத புதிராய்

வெடிவைத்த மனிதனோ
தலைமறைவு...

மனிதம் கொண்ட மனிதர்களோ
யானும் மனிதனென
தலைகுனிவு...

மனிதம் மரித்ததா..?

இல்லை...
மனிதனென்ற காரணத்தால்
யானையிடம்
மன்னிப்பு கேட்ட
கோடான கோடி மனிதர்களால்
ஜெயித்ததா...?

புரியாத புதிராய்...

எழுதியவர் : இரா.இரஞ்சித் (10-Jun-20, 10:56 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 1548

மேலே