பெண்ணிலவு

அயர்ந்து உறங்க எண்ணி
அண்ணாந்து படுத்தேன்
அழகாய் சிரிக்கிறாள் அந்தி வானில்
அவள் பௌர்ணமி நிலவாய் !!!
எட்டி புடிக்க எண்ணி எழுந்தோடினேன்
சட்டென மறைந்தாள் சாரல் மழை மேகங்களுக்குள் ....
சாரல் மழையின் சிறு தூறலாய் வந்தாள்
அள்ளி பருக வெள்ளி கிண்ணம் நீட்டினேன் ..
தள்ளி சென்று துள்ளி குதிக்கிறாள் தரையில் ! வெள்ளமாய் !!!
கதிர்.ந

எழுதியவர் : கதிர் .ந (10-Jun-20, 12:36 pm)
சேர்த்தது : நந்திதா
பார்வை : 1423

மேலே