அஃது இஃது போதுமா

அஃது இஃது போதுமா

அஃது இஃது பேசா எழுத்தடா
உயிரின் மெய்யின் எழுத்தும் எங்கே
தேச விடுதலை வீரர் நூற்றுவர்
தேசத் தீவிர வாதிகள் பலரதில்
குமரன் பாஷ்யம் கொடிக்குயிர் விட்டார்
கப்பல் ஒட்டி பேரிஸ்டர் சிதம்பரம்
வாஞ்சி ஆஷ்துரை சுட்டதீ விரஐயர்
சிவா பாரதித் தோழன் மேடையின்
சிறந்த பேச்சாளர் குடும்பம் துறந்தசீலர்
பாரதி மகாகவி பத்திரிகை ஆசிரியர்
பாரதபுகழ் விடுதலை வீரர்.
இவரை முழுதும் மறைத்தார் திராவிடரே

இவர்பெயர் எதற்கும் வைத்து மகிழார்
இந்தக் கிழவன் தந்தையாம் அண்ணாவாம்
எந்த நூலகம் பேருந்து அங்காடி
எந்த பேட்டை நகர்வீதி ஆஸ்பத்திரி
எந்தவூரும் அண்ணா பெரியார் பெயரா
மந்தபுத்தி மக்களிதைக் கேட்டா ரில்லையே
அந்த விடுதலை வீரர்பேர் இனியேனும்
பாடப் புத்தகத்தில் ஏற்றி
கற்றுபெயர் சூட்ட வழிவகை செய்யுமே

எழுதியவர் : பழனிராஜன் (29-Jun-20, 7:06 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 403

மேலே