புரிதல்கள் யாவும் தோழமையாய்

என்னிலிருந்து என்
என்னைப்பிரித்து-
உன்னில் இணைத்த இனியவனே...

கைபேசி இல்லா காலங்களிலும்...
கடிதத்தில் காதலை பகிர்ந்த பொழுதுகளிலும்...

உன் வருகைக்காக. -
வருடமெல்லாம் காத்திருந்த போதும்...
அலைபேசி அழைப்பிற்காக -
அலுக்காமல் காத்திருந்த போதும்..
இனியவன் குரல் கேட்க-
இமைக்காமல் காத்திருந்த
போதும்....
நீ வரும் நாள்தனில் -
நொடிக்கொரு முறை ..
வழிபார்த்து விழி வேர்த்த
போதிலும்...
வாசலில் என்னவன் முகம் கண்ட போது..
வானம் என்னை ஈர்ப்பதாய் தோன்றும். ....
இதயத்தை யாரோ
இறுக்கிப்பிழிவதாய் தோன்றும்...
குருதி மொத்தமும்
உறைந்து விட்டதாய் தோன்றும்...
அக்குபஞ்சர் ஊசியது
அடிப்பாதம் வரை இறங்கும்...
காலடி மண் சரிந்து
பூமிக்குள் செல்வதாய் தோன்றும்...
காணும் வரையிலும் ...
கனவிலே ஏங்கும் இதயம்...
கண்களால் கண்ட பின்பு
பிணைந்திருக்கும் நாட்களை விடுத்து..
பிரியப்போகும் நாட்களை எண்ணி வாடும்...
விரல் பிடித்து நெருங்கும் போதெல்லாம்
விழிகளால் உன்னை விழுங்கிடத் தோன்றும்...
இத்தனை ஏக்கம் இருந்த போதும்
இரவினில் தூக்கம் தொலைந்த போதும்...
கட்டியவன் வேலை என்னவென்று
காண்பவர் வினவும் வேளைதனில்...
கர்வத்துடன் நான் கூறுவேன்...
நாட்டைக்காக்கும் வீரனே...
நான் கைபிடித்த மணாளன் என்று....!

புரிதல்கள் யாவும் தோழமையே ..
ஒவ்வொரு இந்திய ராணுவனின்
மனைவிக்கும்....

எழுதியவர் : Renu (9-Jul-20, 1:18 pm)
சேர்த்தது : renu
பார்வை : 131

மேலே