இல்லாத ஏழைகளுக்கு

பூவுலகில் பிறப்பெடுத்த
உயிர்களுக்கெல்லாம்
தாகம் தணிப்பதற்கு
தண்ணீர் தர வேண்டி
ஆதவன் பொறுப்போடு
ஆணையிட்டான் மேகத்துக்கு

மனிதர்களைப்போல்
மேகம் சும்மா இராமல்
சூரியனிடம் முறையிட்டு
உதவி கோரியது ,
மேலே எழுந்தது கடல் நீர்
மேகம் மற்றதைக் கவணித்தது

மனிதனின் கல்லீரல் போல்
கடல் நீரை சுத்திகரித்து
குடி நீராக்க மேகம் முயற்சித்து
மழை நீராய் பொழிந்தது
மண்ணில் வாழ் உயிர்களின்
தாகம் தணிந்தது

மேகத்தை போல
மக்களின் துயரை போக்கி
மனம் மகிழச் செய்து
அடுத்தவருக்கு உதவினால்
அவர்களும் தெய்வம் தான்
இல்லாத ஏழைகளுக்கு

எழுதியவர் : கோ. கணபதி. (17-Jul-20, 10:07 am)
பார்வை : 78

மேலே