புத்தன்

புத்தன்
அத்தி மரமொன்றின்
அல்லும் பகலுமான தவம்
அழைத்து வருகிறது அவனை
அரண்மணைக் காவல் மீறி!

அது கொட்டிய தன் நிழலுக்குள்
அவனை சிறைப் படுத்தி
இரக்கிறது அதன் தவத்தையும்
ஏற்க வேண்டி!

அவனோ
அமைதியின் அடிமடியில்
புதைத்துக் கொள்கிறான்
தன் மனதை!

அவன் தேடல்களின் தாகங்கள்
தோண்டுகின்றன
அவனுக்குள் ஓர் ஞான ஊற்றை!

துன்பத்தின் பிறப்பிடம் அறியாது
ஓர் இருப்பிடம் கொள்ளாததாய்
அவன் ஆன்மா!

அங்கே கண்டு தெளிகின்றான்
ஆசை விருட்சத்தில்
அசைந்தாடும் விழுதுகளாய்
துன்பமென!

வீட்டைத் துறந்தவன்
யாசிக்கின்றான்
வீடு வீடாய்
ஆசை கொல்வீர் எனும்
தன் ஆசையைச் சொல்லி!
சு.உமாதேவி

எழுதியவர் : சு. உமாதேவி (22-Jul-20, 10:54 pm)
Tanglish : butthan
பார்வை : 83

மேலே