தனிமனிதன் மாறினால்

தனிமனிதன் மாறினால் உலகம் மாறும்!
சரியான வழிநோக்கித் தான்முன் னேறும்!
இனிதான நல்வாழ்க்கை யார்க்கும் வாய்க்கும்!
இடர்செய்யும் பிரிவினை வாதத்தைச் சாய்க்கும்!
மனமிணைக்கும் அன்புணர்த்தும் சகிப்புத் தன்மை,
மதநல்லிணக்கம், மற்றும் மதச்சார் பின்மை -
புனிதமென இங்கிவற்றைப் போற்றி வந்தால்
புவிமிசை பேரமைதி குடிகொள்ளும் அன்றோ!

எழுதியவர் : இமயவரம்பன் (13-Aug-20, 7:40 am)
சேர்த்தது : இமயவரம்பன்
பார்வை : 1939

மேலே