பட்டாசு

பிறர் மகிழ 
உடல்சிதறி உயிர்விட 
பிறந்த பட்டாசே! 

திரிக்கிள்ளி கொழுத்தியும் 
அமைதியாய் உன்னில் 
அனைந்து போனதேனோ?

மழைத்துளி ரகசியமாய் 
மண்ணை விடுத்து 
உன்னை முத்தமிட்டதோ?

வாடிக்கை வாழ்க்கையை  
உடைத்தெறிய நீ
காட்டும்  வேடிக்கையோ?

தீ வைத்தோர் 
திரும்ப வந்ததும் 
திடுக்கிடவைக்க திட்டமோ?

சிதறுண்ட  உற்றார்க்கு 
செலுத்தும் இறுதி    
மௌன அஞ்சலியோ?

நொடிகள் சில கடந்த நிலையில் 
இறந்த இதயம் இதயமூச்சூட்டலால்(CPR ) புத்துயிர்
பெறுவது போல  வெடியின் தீ 
உயிர் பெற்றதால் வெடித்தது வெடி!

எழுதியவர் : தினேஷ் காளிமுத்து  (13-Aug-20, 8:54 am)
பார்வை : 70

சிறந்த கவிதைகள்

மேலே