காதலின் கண்ணீர் துளிகள்
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
*காதல் தோல்வி கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
பெண்ணே!
நான்
உண்மையாகத்தான்
உன்னை நேசித்தேன்
ஆனாலும்...
நீ என்னை
நேசிக்கவில்லை....
அதற்காக
தாடி விட்டு
புகை பிடித்து
தண்ணி அடிச்சி
வாழ்க்கையை
சீரழித்து
என் காதலை நிருபிக்க
நான் விரும்பவில்லை
ஏன் எனில்....
நான்
மனிதனாக பிறப்பது
ஒரு முறை தான்....
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
மனைவியின்
நிஜத்தோடு
வாழ்கின்றவர்களில்...
பலர்
காதலியின்
நினைவோடும்
வாழ்ந்து கொண்டு தான்
இருக்கிறார்கள்....!!!
🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡
காதலித்தவர்களில்
சிலர்
காதலியோடு வாழ்கிறார்கள்...
பலர்
காதலியின்
நினைவோடு வாழ்கிறார்கள்....
ஒருசிலர்
காதலோடே வாழ்கிறார்கள்...!
எப்படியானாலும்
காதல் தரும் சுகத்தில்
வேறுபாடு இல்லை.....!!!
💚💚💚💚💚💚💚💚💚💚💚
பெண்ணே.!
கடிதமாய் வந்தேன்
கிழித்துப் போட்டாய்...
தென்றலாய் வந்தேன்
சன்னலை சாத்தி வைத்தாய்....
ரோஜா மலராய் வந்தேன்
தூக்கி எறிந்தாய்....
மழையாய் வந்தேன்
குடைப்பிடித்தாய்......
மௌமாய் வந்தேன
கண்டபடி திட்டினாய்.....
பிணமாய் வருகிறேன்
கண்ணீர் வடிக்கின்றாயே...?
💙💙💙💙💙💙💙💙💙💙💙
பெண்ணே!
உன்னால்
இறந்ததை நினைத்து
நான்
வருத்தப்படவில்லை...
இன்னொரு முறை
இறப்பதற்கு
வாய்ப்பில்லையே! என்று
வருத்தப்படுகிறேன்....
ஆம்....!
எனக்காக
நீ
இரண்டு சொட்டு
கண்ணீர் விட்டாய் அல்லவா....?
*கவிதை ரசிகன்*
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

