அவள் மணம் நுகர்ந்து

தவழும் முகிலின் சாரல் பொழிவில்
வாழை மடலின் அருகில் அமர்ந்து
அழகு உணவை அதிசூடாய் இட்டு
குழம்பை ஊற்றி குழைத்து பிசைந்து
சுவைத்து விழுங்கி உள்ளம் மகிழ்ந்து
அமிழ்த சுவையை ஆழ்ந்து உணர்ந்து
வழங்கியோரை வாழ்த்தி புகழ்ந்து
உழைத்த களைப்பை வீழ்த்திய உணவால்
உற்சாகம் பெற்று அழற்சி களைந்து
கொழுத்த வாழை பழத்தை சுவைத்து
கொழுந்து வெற்றிலை குதப்பி விழுங்கி
கொஞ்சும் மனைவி இதழை சுவைத்து
அணைத்து பிணைந்து அவள் மணம் நுகர்ந்து
ஆழ்ந்த ஆற்றில் மாட்டிய வேழமாய்
மகிழ்ந்து வாழ்வது மட்டற்ற மகிழ்வே.
-------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (24-Sep-20, 9:21 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 76

மேலே