காதல்
கல்லில் தேரை இருப்பது தெரியாது கல்லை
கல்லுளியால் சிற்பி சிற்பம் வடிக்க
தட்டும்போது வெளிப்படும் உள்ளிருந்து தேரை
என்னெஞ்சுக் குள்ளே நீயிருப்பதும் பெண்ணே
உன்கையால் என்னை நீ தீண்டும்போதே வெளிவரும்