தமிழ் மழை சொல் ஆழம் ஒரு அலசல்

ஏன் அடை மழை என்கிறோம் ?

அடை மழை = வினைத்தொகை

அடைத்த மழை , அடைகின்ற மழை , அடைக்கும் மழை

விடாமல் பெய்வதால் , ஊரையே அடைத்துப் பெய்வதால் அடை மழை என்ற வினையோடு பெயர் சூட்டப்பட்டது .

கன மழை வேறு , அடை மழை என்பது வேறு.

தமிழில் 14 வகையான மழை உண்டு என்று நம் இலக்கியங்கள் வகைப்படுத்துகின்றன .

மழை , மாரி , தூறல் , சாரல், ஆலி, சோனை ,, பெயல், புயல், அடை மழை , கனமழை , ஆலங்கட்டி , துளிமழை , வருள்மழை .

வெறுமனே மழைக்கு பல பெயர்கள் தரவில்லை . ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு .
இயற்கை நுனித்த தமிழ் !

மழ -- தமிழில் உரிச்சொல்

மழ களிறு --இளமையான களிறு

மழவர் --இளைஞர்கள்

அந்த உரிச்சொல் புறத்துப் பிறப்பதே மழை எனும் சொல் .
மழ ஐ

இளமையின் அலட்டல் போல் , காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால் புதுநீர் உகுப்பதால் காரணப் பெயர் .

அறிக தமிழ் நுட்பம் ! இயற்கை

மழை / மாரி ஒன்றா ?

மழை = இள மென்மையாக அலைந்து பெய்வது , காற்றாடி போல

மாரி = சீராகப் பெய்வது ,தாய்ப்பால் போல

மார் இ = மாரி .தாய் மார்பிலொழுகும் பால் போல் , அலையாது சீராகப் பெயல் .

அதான் மாரி அம்மன் எ .ஆதிகுடிப்பெண் . தெய்வமானாள் .

தமிழ் மொழி பிறமொழி போல் அல்ல , வாழ்வியல் மிக்கது .

ஆலி --ஆங்காங்கே விழும் ஒற்றை மழைதத்துளி - உடலோ, உடையோ நனையாது .

தூறல் - காற்றுள்ள இல்லாமல் தூவலாக பெய்யும் மழை . புல் பூண்டின் இலைகளும் நம் டைகளும் சற்றே ஈரமாகும் . ஆனால் நனையாது .

சாரல் --பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் மழை சாரல் எனப்படும் . மழைப் பெய்யுமிடம் ஓரிடமாகவும் காற்று அந்த மழைத்துளிகளை கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை சாரல் என்பர் . சாரல் என்பது மலையில் பட்டு தெறித்து விழும் மழை என்ற கூற்று தவறானது .

கன மழை --துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும் .

ஆலங்கட்டி மழை -- திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து , மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ஆலங்கட்டி மழை .

பனிமலை -- பனித்துளிகள் மழை போல பொழிவது . இது பொதுவாக இமைய மலை போன்ற மலைகளில் பொழியும் . ஆழி

எழுதியவர் : வசிகரன் .க (13-Nov-20, 5:15 pm)
பார்வை : 674

சிறந்த கட்டுரைகள்

மேலே