மின்ன மின்ன வண்ணத்துணியால்

பாலோடு தேன் கலந்து குளிப்பாட்டினால் உம்மை
பரிவாக தினம் அவர்களுக்கு பரிசுகள் தருவீரோ
பசை மிகுந்த பாலினால் உமது உடலில் அரிப்பு
படாது பாடு படுத்தும் என்பதை நீர் உணர்வீரோ
எண்ணெய் பசை மின்ன மின்ன வண்ணத்துணியால்
உமக்கு எழில் ஒப்பனை செய்வதை அன்பாக ஏற்பீரோ
புரியாத மொழியின் வார்த்தையால் மந்திரமென்று
புலம்புகின்ற மானிடரை அன்பொழுக அணைப்பீரோ
சிலையாக எந்நாளும் கலையாக இருந்தவாரே
பல பாவம் செய்யுகின்ற நிலையினரை காப்பீரோ
உணர்வோடு உன்னைக்காண உன்னிருப்பிடம் வந்து
உடுக்கை இழந்தவன் நிலையாவதை கவனிப்பீரோ
பணத்தைக் கொண்டு உம்மைப் பதப்படுத்தியே
பல வகையில் உம்மை விற்பனை செய்வோருக்கு
பக்க பலமாய் துணையிருந்து காக்கிறாயோ இறையே
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (30-Dec-20, 5:49 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 295

மேலே