சாக்காடு தான்
பாம்பாட்டியின் மகுடிக்கு
பாம்பு ஆடும், அடங்கும்,
பாம்பாட்டியின் வயிறும் நிறையும்
அடங்காமல் போனால்
அந்த பாம்பு கொடுமையானது
அவனைக் கொல்லவும் செய்யும்
பாம்பை போலத்தான்—கடவுள்
படைத்த மனித நாக்கும்
மானுடத்துக்கு மரியாதை சேர்க்கும்
முரண்பட்டால் உயிரையும் பறிக்கும்
நமக்குக் கட்டுபட்டால் அது நாக்கு
நாம் கட்டுபட்டால் சாக்காடு தான்