மனிதர்கள் சிலையல்ல
மறைந்த தலைவர்களின்
சிலைகளுக்கு
மாலை, மரியாதை செய்து
தன்னுடைய தனிப்பட்ட
செல்வாக்கினை
உயர்த்திக்கொள்ள....!!!
உயிரோடு இருக்கும்
மனிதர்களை ஏணியாக
பயன் படுத்தும் மனிதா...!!
உன் தேவை
முடிந்த பிறகு
அவர்களை
சிலைகளாக மாற்றி
தவிக்க விட வேண்டாம்...!!
--கோவை சுபா