என்னவளும் நானும் 555

***என்னவளும் நானும் 555 ***


அவளோடு...


கடற்கரை ஓரம் செங்கதிர்
உதிக்கும் நேரம்...

கடல்
கன்னியை கண்டேன்...

ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள்
ஆரவாரமில்லா அவள் விழிகள்...

குதிரைவாளாய் அவள்
கூந்தல்
அங்குமிங்கும் ஆட...

நான்
நின்று
இளைப்பாறினேன்...

நாகரி
உடை
யில்
கடற்கன்னி...

அவள்
எதிரே
நான்
நிற்க...

புருவம்
உயர்த்தி பார்த்தாள்...

அவள் விழியில்
என்னை கண்டேன்...

அவள் இதழ்கள் முனுமுனுக்க
என்னை தாண்டி சென்றாள்...

அவள் இதழ்கள் முனுமுனுத்த
வார்த்தைதான் என்னவோ...

என் செவிகளோ தினம்
என்னெதிரில் வருவாயா என்று...

தினம் தினம்
கடற்கரையில் அவளுக்காக...

அவள் எதிரில்
நான் காத்திருந்தேன்...

திருமணத்தில் ஒருநாள்
இணைந்திருந்தேன்...

இன்றுவரை
இணைபிரியாத ஜோடியாய்...


நானும் அவளும்
இல்லற வாழ்வில்.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (9-Jan-21, 9:29 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 754

மேலே