அம்மா

அம்மா எனத் தொடங்கும் அகம், புறம் பற்றிய காரிகை...!!!
அம்மா ( அகம் )
அம்மா மனத்திலும் ஆசை வளர்த்தவென் ஆரணங்கே
சும்மா நினைக்க சுகத்தி லிதயந் துடிக்கிறதே
செம்மா துளைவாய்ச் சிரிப்பில் கவிழ்த்துச் சிறைபிடித்தாய்
எம்மா துமுனக்கீ டில்லை யறிந்தேன் எனதுயிரே!
அம்மா ( புறம்)
அம்மா மகனையும் அப்ப னுடனே அனுப்பிவைப்பாள்
தம்மின் உறுதியாய்த் தாய்நாடு காக்கத் தனித்திருப்பாள்
வம்போ வழக்கோ துவளாது தானே வகையறிவாள்
வெம்பும் நிலையிலும் வீரம் விதைக்க விழைபவளே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Jan-21, 12:28 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 184

மேலே