இப்ப இல்லையின்னா எப்போ

அத்தனையும் துறந்து
விட்டேன் என்பான்.
அகிலத்தை வெறுத்து
விட்டேன் என்பான்.
உள்ளிருக்கும் கடவுள் தேடி
ஊரூராய் அலைந்திடுவான்

இறைவனைத் தொட்டிடவே அவன்
இல்லறத்தை விட்டேன் என்பான்.
ஆண்டவனைக் காண அவன்
ஆசையைத் துறந்தேன் என்பான்.
விட்டேன் விட்டேன் என்பார்க்கு
விடவில்லை ஆசையெனத் தெரிவதில்லை.
ஆண்டவன் தரிசனம் மட்டும்
ஆசையன்றி வேறு என்ன?

பொறுப்பை இவர் உதறிவிட்டு,
உருவத்தையும் மாற்றிவிட்டால்,
இறைவன் கண்ணில் தெரிவானா?
இறையின் அருள்தான் பெறுவானா?

சாமியார் வேடமிட்டு, பல
சத்திரங்கள் கட்டிக் கொண்டு,
சாமியாக இவரே மாறிடுவார்.
இந்த
வீணர் பாதம் தொட்டு வணங்கி,
வீட்டில் சேர்த்த பணமும் கொட்டி,
சாத்திரம் கேட்க அங்கே,
பைத்தியக் கூட்டம் ஒன்று,
மெய் பணிந்து நிற்கின்றார்.
பொய் மனிதர் முன்னாலே.
இறைவனைக் காண்பதற்கு,
இடையில்
இடைத் தரகன் இங்கெதற்கு?


தாடிக்குள் குடியிருக்கும்
கேடித்தனம்,
இந்த பக்தகோடிக்கு
இப்போ இல்லையின்னா
இது புரிவதெப்போ?
காசு பறிக்கும் பகல்வேடம்
கடவுள் தேடும் பக்தருக்கு, இப்போ இல்லையின்னா தெரிவதெப்போ?


ச.தீபன்
94435 51706

எழுதியவர் : தீபன் (17-Jan-21, 5:30 pm)
சேர்த்தது : Deepan
பார்வை : 260

மேலே