ஒருதலைக் காதல்
ஒருதலைக் காதலில்..
காத்திருப்பில் காலம்
கடக்கும்..
தேடலில் எல்லாம் மனம்
தொலையும்..
பார்வை போதும் பரவசத்தில் உயிர் கரையும்..
எதிர்பாரா மெய்தீண்டலில் உடல் உருகும்..
கற்பனையில் கட்டுக்கடங்கா காதல் பெருகும்..
கனவுகள் நீள வேண்டுமென ஏக்கம் கூடும்..
காதலை பார்க்கும் போது இமைத்திடும் இமையும் எதிரி ஆகும்..
கண்ணாடி காதல் சொல்லி பயிலும் பொருளாகும் ..
பல நேரங்களில் காதலாக வான்நிலவு மாறும்..
ஆனாலும் இந்த ஒருதலைக் காதல் ரசிக்கபட வேண்டியவரால் என்றும் ரசிக்கபடுவதில்லை..