தட்டேட்டு அச்சினில்

ஏடவிழ் மாலை ஈதென வில்லை
எடுத்தான் ஒடித்தான் ராமன்

ஏடகலா பாலை கள்ளத்தனமாய்த்
திருடிக் குடித்தான் கண்ணன்

ஏடெடுத்து நற்றமிழ் கவிதைகளை
புனைந்தான் சங்கக் கவிஞன்

தட்டேட்டு அச்சினில் நித்தம்
நர்த்தனமாடுகிறான் கணினிக் கவிஞன்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Mar-21, 9:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே