என் காதலும் அவளின் தாக்கமும்
சின்னஞ்சிறு கூடுகட்டி
கடலென ஆசை சுமந்து
நித்தம் புதுப்புது கவிபாடி
வண்ணங்களில் உன் முகம்
எழுத்தில் உன் முகம்
தென்றலில் உன் தேகம் என
நெஞ்சம் நிறைய
நினைவுகளை சுமந்தேன்
ஒவ்வொரு காதலுக்கும்
ஓர் பாடல் என பாடலும்
பல காதலை சுமக்கிறது
அதேபோல் தான் செல்லம்மாவிலும்
நினைவுகளை செதுக்கினேன்
சிறு சிறு செயல்கள்
சிறு சிறு ஆசை வார்த்தைகள்
என செதுக்கிய காவியம்
சிதைந்ததுதான் விதி
என் வலியை புகுத்தவில்லை
மாறாக உன்னிலையை
உணர்ந்தேன் புரிந்ததால் தான்
விட்டும் கொடுத்தேன்
விலகியும் நின்றேன்
கைமாறு ஏதும் கேட்கவில்லை
ஆனால் மனம் நோகாமல்
பார்த்திருக்கலாம்
காதல் என்ற ஒற்றை
சொல்லில் அனைத்தையும்
உறைத்தாய் நீயா இப்படி
என்பது பெருமகிழ்ச்சி
நீயும் இப்படியா என்பது
பெரும் துயரம்
காலம் பல
உண்மைகளை உடைத்தது
இனி அன்பு கொளல்
அர்த்தமற்றது
வெறுப்பை உமிழ்தலும்
தேவையற்றது
உன் ஏக்கங்கள்
அனைத்தையும் எனதாக்கினேன் நிறைவேற்றினேன்
என் வலியை உணர மறுத்தது ஏனோ
இறுதி வரை ஆசை என்பதும்
வெறும் கணவாகவே கரைகிறது
ஆணி வேராகினாய் அன்று
நெஞ்சம் குளிர்ந்தேன்
இன்று நெஞ்சம் பிளந்தாய்
சிதைந்தது கூடு
சிதைந்தபின் சேராது
சேர்ந்தாலும் பழைய
பந்தம் நேராது
ஆதலால் தான் இன்று
காதலை வெறுக்கிறேன்
என்னவள் வருவாள்
எனதாசையை நிறைவேற்ற
ஆனால் உன்னால் மட்டுமே
உயிர்த்தெழும் வரிகளை
காலம் முழுதும் சிறைபிடித்தது ஏனோ ????
எழுத்து சே.இனியன்