நீயே என் பலம்

அம்மா, உன் பாசத்தால்
என்னைத் தினம் தினம்
வியப்படையச் செய்கிறாய்…

நான் கருவில் இருந்தபோது
உனக்களித்த துயரம் தான் எத்துணை..!
அக்கணம் கூட என்னை பாரம் என
இறக்கி வைக்காமல்
பத்து மாதம் சுமந்தெடுத்தவள் நீ…

என் கண்களில் வழிந்த
கண்ணீரைப் பாசத்தால்
துடைத்தவள் நீ...

கஞ்சிக்காக ஏங்கிய காலத்தில் கூட
என் வயிறு காயாமல் காத்தவள் நீ...

என் கனவுக் கோட்டைக்காக
அல்லும் பகலும் உழைத்தவள் நீ...

வருடங்கள் ஓடி மாதங்கள் கழிந்து
வயதானாலும் இன்றும்
எனக்குப் பலமாக இருப்பவள் நீ...

எவ்வளவு துன்பத்திலும் இன்முகத்துடன்
அரவணைக்கும் உன்னைப் போற்றாமல்
இருக்க முடியவில்லை என்னால்..

கடவுள் உண்டோ இல்லையோ
ஆணோ பெண்ணோ என்ற
ஆராய்ச்சித் தேவையில்லை..
என் கடவுளாக வலம் வருகிறாய் தினமும் நீ..!
என்றும் உன்னை வணங்கும் மகள்..!

எழுதியவர் : நிரஞ்சனா (26-Mar-21, 1:05 pm)
சேர்த்தது : Niranjana
Tanglish : neeye en palam
பார்வை : 848

மேலே