காதல் கவிதை - போறபோக்கில் ஒரு பெண்ணிற்கு ஒரு கவிதை

போறபோக்கில் ஒரு பெண்ணிற்கு ஒரு கவிதை!!!

சாலை ஓரம் ஒரு சாரல் காற்று

மனதிற்குள் ஒரு சங்கீத ஊற்று

அவள் கண்களோ தெளிந்த நீரோடை

அவள் இதழோ தேனீக்கள் புசிக்கும் தேனாடை

அவள் சிரிப்போ சிதறிய முத்துக்கள்

அவள் பார்வை என் மனதின் யுத்தங்கள்

அவளது கன்னம் இரட்டை பிறைநிலவு

உன்னை நான் பார்க்காமல் இருக்கலாம்

கண்டு நேசிக்கும் உறவை விட

காணாமல் நேசிக்கும் உறவு

அற்புதமானது

நீ

நான்

என்று

பிரிவு இல்லாமல்

நாம்

என்ற

உறவில்

கலந்து இருப்போம்

காலம் வரைக்கும் அன்பால் பிணைந்து இருப்போம்

என்றும் காத்திருக்கும் உன்...........

விடையளிக்க விரைவில் வருவாயா?

நான் கேட்காமலலேயே உன் அன்பை தருவாயா?

என்றும் உன் நினைவில் உன் ..........!!!

-கவிஞன். வளர்பிறைதாசன்

எழுதியவர் : கவிஞன்.வளர்ப்பிறைதாசன் (27-Mar-21, 8:01 pm)
பார்வை : 154

மேலே