மறுபக்கம்

மேகங்கள் அற்ற இரவு வானில்
தனித்து எரிந்து கொண்டிருக்கும்
முழு நிலவை
நீர் வெறித்து பார்த்ததுண்டா ?

காற்றை பிரிந்து இலைகளின் உரசலின்றி
அமைதியின் உருவாய் நின்றிருக்கும்
ஆலமரத்தினை
நீர் வியந்து பார்த்ததுண்டா ?

மழை முகில் சூழ்ந்த பகல் பொழுதில்
சிறு பறவையின் சஞ்சாரமுமற்றிருக்கும்
இருண்ட வானத்தினை
நீர் தலை தூக்கி பார்த்ததுண்டா ?

வாடிய மலரென அறியாது இதழ்கள்
இணைத்து மது அருந்த வரும்
பட்டாம்பூச்சியின்
ஏமாற்றத்தை நீர் பார்த்ததுண்டா ?

தானும் ஒரு நாள் மங்கையின் கூந்தலில்
மகுடமாய் சூடப்படுவேன் என காத்துக்கிடக்கும்
கணகாம்பரத்தை
நீர் உற்றுப்பார்த்ததுண்டா ?

இயற்கையின் இக்காட்சிகள்
அதன் சொல்லப்படாத
துயரத்தை உங்களுக்கு
உணர்த்தவும் கூடும்.

இந்நிகழ்வுகள் உங்கள்
ஆழ் மனதில் புதைந்த சோகத்தை
கண் வழியே கண்ணீராய்
காட்டவும் கூடும்.

இது இயற்கையின்
மறுபக்கமாக
இருக்கவும் கூடும்.

எழுதியவர் : Abdurrahman AB (6-Apr-21, 1:04 pm)
சேர்த்தது : Abdurrahman
Tanglish : MARUPAKKAM
பார்வை : 140

மேலே