காமத்தில் புசி

இரவினில் ஆயிரம்
க(ஆ)ண்கள்
வடிகால் தேடி

வயிற்றுப் பசியின்
விடியலுக்காய்
காத்திருக்கும்
மங்கையர் எனும்
வாய்க்கால் தேடி

சமைக்காமல் விருந்து
படைக்கிறார்கள்
சேலை இலை விரித்தும்
அங்கத்தில் பூத்திருக்கும்
ச்சோலை மலர் இதழ் விரித்தும்

பருமாறுகிறார்கள்
பல வருடங்களுக்கு
முன் சமைந்தவர்களுடன்
சேர்ந்து சமீபத்தில்
சமைந்தவர்களும்
சாந்தி முகூர்த்தம்
கண்டவர்களும்....

பாவம்....
என்ன செய்வார்கள்
வயிறு எரிகிறது
மனது கொதிக்கிறது
சமயத்தில்
சமைந்தவர்களுக்கு
சமைத்து உண்ண
வழியில்லையே....

எழுதியவர் : மேஜர் முருகன் (1-Jun-21, 7:52 am)
சேர்த்தது : Major Murugan
பார்வை : 67

மேலே