தம்பிக்கு
உன் உதயங்களில்...
மேலும் ஓர் புது உதயம்..,
இளங்காற்றைக் குடித்து,
தென்றலைத் தழுவி,
வண்டாய், பறவையாய்
இலக்கை நோக்கி,
கைகளை நீட்டி,
கனவுகளைப் பிடித்து,
கவலைகள் தொலைத்து,
மடியிறங்கி மகவு மண்ணைத் தொடும் வேளை போல..,
அன்னையின் மகிழ்வில்
ஒரு கீற்று வளர்ந்திட்ட,
முழுநிலவே.....!
மங்காது ஒளி வீசு...!
வேல் முனியசாமி.