ஆனந்த கண்ணீர்

என் இனியவளே
என்னை கண்டவுடன்
பூத்துக்குலுங்கும்
புது மலரைப்போல்
உன் சிரிப்பு இருந்தது ...!!

துள்ளிக்குதித்து ஓடிவந்து
என் மீது சாய்ந்தவுடன்
உன் விழிகளின் ஓரங்களில்
வழிந்தோடிய கண்ணீர் துளிகள்
என் மார்பினை நனைத்தது ..!!

அது ஆனந்த கண்ணீர் அன்றோ
நம் நெருக்கத்திற்கு மிகவும்
சுகமாகவே இருந்தது ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (2-Jun-21, 9:59 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : aanantha kanneer
பார்வை : 304

மேலே