காதல் கவிதை வரைந்தேன் உனக்கு

என் காதலை
உன்னிடத்தில் தெரிவிக்க
நான் கையாண்ட வழிமுறைகளை
இப்போது நினைத்தாலும்
நகைச்சுவையாக உள்ளது
உனைப் பிரிந்த இந்த மனசங்கட நேரத்திலும்...


நீ அழகாக இருக்கிறாய் என்பதினால் தான்
உன்னை நான் காதலித்தேன்
என் அதிர்ஷ்டம் நீ அன்பாகவும்
இருக்கிறாய்
இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு.
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (4-Jun-21, 5:49 am)
பார்வை : 108

மேலே