விழித்திரு
" விழித்திரு"
வந்தத் தொற்றை விரட்டிடலாம்
...வாரி இறைக்க பணமிருந்தால் !
எந்தத் தொற்றும் ஓடிடுமே
...எங்கும் நீயும் விழித்திருந்தால் !
சொந்தம் என்றே நுழைந்திடுமாம்
... சுத்தம் இன்றி நீயிருந்தால் !
பந்தம் எல்லாம் ஓடிடுமாம்
...பணமோ கேட்டு நீசென்றால் !
( அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்)
மரு.ப. ஆதம் சேக் அலி