காதலா என்றாள்

சிந்துநதியில் அந்திப்பொழுதில்
அழகுப்படகில் பஞ்சாபியெழில்
இளம்பெண்ணவள் மெல்லநாணினள்
செந்தமிழினில் அவள்சிரித்தனள்
அந்திநிலவும் ஒளிசிந்திட
சுந்தரி
ஒருதமிழ்ச் சொல்லால் என்னைக் கொன்றாள்
காதலா என்றாள் வடக்கத்தி வஞ்சியே !

----குறளடி வஞ்சிப்பா
யாப்பில் இந்தப்பா வடிவக் கவிதைகள் குறைவு
இது கனிச்சீர்களால் அழகு பெறும் பா வடிவம்
பா வடிவை நான் குறிப்பிடவில்லையானால் புதுக்கவிதை போன்றே
தோற்றமளிக்கும்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jun-21, 4:01 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே