சீரகச்சம்பா அரிசி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சீரகச்சம் பாஅரிசி தின்னச் சுவையாகும்
பேரகத்து வாதமெல்லாம் பேருங்காண் - வாருலகில்
உண்டவுட னேபசியும் உண்டாகும் பொய்யலவே
வண்டருறை பூங்குழலே வாழ்த்து
- பதார்த்த குண சிந்தாமணி
இனிமையான சீரகச் சம்பாவரிசியை உண்டால் சுவை பெருகும்; உண்டவுடனே பசியெடுக்கும்; சில நோய்களும் குணமாகும்