விழித்தவுடன் சுத்தோதகம் அருந்தல் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
தூங்கி விழித்தவுடன் சுத்தோத கம்மருந்தில்
ஓங்கிநின்ற பித்தம் ஒழிவதன்றித் - தேங்கும்
மலமூத் திரந்தங்கா வாதாதி யந்தந்
தலமாத் திரமுலவுந் தான்
- பதார்த்த குண சிந்தாமணி
சுத்தோதகம் - சுத்தமான நீர்
விழித்தவுடன் நீராகாரம் அல்லது தூய்மையான நீரை அருந்தினால் பித்தம் விலகும்; மலக்கட்டு நீங்கும்; வாதமுதல் மூன்றும் தன்னிலை பிறழாது