தந்தையர் தின கவிதை

எங்கள் தந்தையர் நாடு எனும் போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே


நான் உண்ட மிச்சத்தை
தான் உண்டு களித்த –
அந்த உறவு இனி வருமா!!!
நான் பள்ளி செல்ல
தோளிலும் மிதிவண்டியிலும் சுமந்த –
அந்த உறவு இனி வருமா!!!
தன் அலுவலக டீ காசு எல்லாம்
என் மாலை நேர நொறுக்கு தீனியாய் தந்த –
அந்த உறவு இனி வருமா!!!
என் புத்தாடைக்காக தன்
கந்தலை கசக்கி கட்டிய –
அந்த உறவு இனி வருமா!!!
தமிழை உணர்விலும், தன்மானத்தை நரம்பிலும்
பாசத்தை பண்பிலும் பகிர்ந்தளித்த –
அந்த உறவு இனி வருமா!!!
தாய்மை உணர்வு போற்றபடவேண்டியதென்றால்
தந்தையர் உணர்வு வணங்கப்படவேண்டிய ஒன்று
உலக தந்தையர் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த
வணக்கங்களும் வாழ்த்துக்களும்!!!!!!!
🙏🙏🙏

எழுதியவர் : இளங்கோவன் சிவலிங்கம் (20-Jun-21, 4:50 pm)
சேர்த்தது : Ilangovan M S
பார்வை : 32

மேலே