மரணம்

மறக்காமல் வருவது மரணம்;
மதிப்பதில்லை மரணம்;
மதிக்காது வருவது மரணம்;
விலை போகாதது மரணம்;
விலைகொடுத்து தள்ளிப்போட முடியாதது மரணம்;
விதிமுடிந்ததும் வருவது மரணம்;
கல்லரைகள் கட்டிய காவியமே மரணம்;
மூட்டிய தீய்க்கள் முடிந்திட துடிப்பது மரணம்;
மையால் எழுதப்படாதது மரணம்;
வாழ்க்கையின் முடிவே மரணம்;
பிரிவைத் தருவது மரணம்;
பெயர் இல்லாதது மரணம்;
பிடித்தே வருவது மரணம்;
சாதிபேதம் பார்க்காதது மரணம்;
சாய்த்திட வருவது மரணம்;
சதிசெய்தாலும் வரும்;

உள்வந்ததும் காற்று;
உறவாடிச்சென்றதும் காற்று;
உயிர் இருக்கும் வரை உடல்;
உயிர் பிரிந்தால் கட்டை.

நரைத்த முடியில்;
நடுங்கிய உடம்பில்;
நன்றாய் இறுதியாக தூங்குவது மரணம்;

பிறர் கூறி வருது இல்லை மரணம்;
பிடிவாதம் ;
பிடிக்க வருவது மரணம்;
தடத்தாலும் விடாது மரணம்;
தடைபோட முடியாதது மரணம்;
தவறாமல் வருவது மரணம்;
கண்ணீர் விட வைப்பது மரணம்;
நல்லவன் கெட்டவன் என்று பார்க்காமல் வருவது மரணம்;
பணக்காரனோ ஏழையோ
மனிதனோ மிருகமோ;
மறக்காமல் வருவது மரணம்;
ஆடியவனும் அடங்கித்தான் போவான் மரணத்தில்;
அகந்தை பிடித்தவனையும்;
அமரனாக்கும் மரணம்;

துடிக்கும் உன் இதயம்;
நிறந்தரமாக தூங்கப்போவதுதான் மரணம்;
எதையும் எதிர்பார்த்து வருவதில்லை மரணம்;
வாழ்வு என்னும் படிப்பின்,
முடிவே மரணம்.

பேச்சி மூச்சி இல்லாமல் போவதே மரணம்;
மரணமும் ரணம் தான்;
கொடுத்தவன் எடுத்துக்கொள்வான்;
தடுப்பவன் யாரும் இல்லை;
ஓட்டிய உறவுகள் ஒதுங்குவது மரணம்;
ஓலம் இட்டே உன்னை இறுதியாக எடுத்து செல்வது மரணம்;


அம்மா அப்பா அண்ணன் தம்பி அக்கா தங்கை மனைவி
குழந்தைகள் என்றே உறவு கூடிக்கொண்டே போனாலும்
கூட்டிக்கொண்டு போக வருவது மரணம்.


தவணையில் கிடைப்பதில்லை மரணம்;
தவறால் பிறந்தது ஜனனம்;
தவறால் முடிவதும் மரணம்;
அவனுக்கு மட்டுமா எனக்கும் என்று கேட்கவைக்காதது மரணம்.

எங்கே தொலைந்தாய் உடலே;
எங்கே தொலைந்தாய்;.
இவ் உலகை விட்டு எங்கே தொலைந்தாய்.

ஓடிய காற்றில் ஒளிந்தாயோ;
ஓடிய நதியில் ஓடினாயோ;
பாடிய பாட்டில் புதைந்தாயோ;
வெட்டிய மண்ணில் புதைந்தாயோ;
மூட்டிய நெருப்பில் வெந்தாயோ;

எங்கே தேடுவேன்;
நீண்ட உறக்கமோ;
நிலைகொண்ட தூக்கமோ;
மாண்ட மயக்கமோ;

உடலை வதைத்த உயிரே;
உறவாடும்போது உயிர்த்தாய்;
உயிர்ப்பித்த போது உருகினாய்;
தவித்த போது தழுவினாய்;
தள்ளாடும் போது உருகினாய்;
ஒடிந்தபோது ஓடினாய்;
எங்கே சென்றாய் மரணமே.

போரில் வென்ற வீரனும்;
புடை சூட வந்த மன்னனும்;
மண்ணுக்கே விருந்தானான்;
எங்கே சென்றாய்;.

இறுதிக்கு உறுதி செய்தாய்;
இதயத்தை துடித்து நிற்க வைத்தாய்;
எடுத்துச் சென்ற பிறகு;
மறக்க வைத்தாய் மனமே.

நோயாய் வந்தாய்;
மூப்பாய் துறந்தாய்;
விதியில் வந்தாய்;
வீற்றிருக்க வந்தாய்;
விபத்தாய் வந்தாய்;
இயற்கையின் அழிவாய் வந்தாய்;
பகையாய் வந்தாய்;
கூட்டாய் வந்தாய்;
கொண்டே சென்றாய்;
பிஞ்சில் வந்தாய்;
இளமையில் எடுத்தாய்;
சருகாய் எடுத்தாய்;
சரிந்திட வதைத்தாய்;
சாய்ந்திட வைத்தாய்;
எத்தகை மரணம்;
எதற்கிந்த ஓலம்.

ஓடிடும் உடம்பிற்கு ஓட்டம் எதற்கு;
ஓட்டும் நிற்கும் வரை ஓடட்டும் உயிரும்;
ஒளிந்து வாழ்திடாதே;
ஒளியும் போகும் ஒருநாள்;
ஓடிடும் வாழ்கையில் வேட்டை எதற்கு;


சுடும் வரை நெருப்பு;
சுட்டபின்பு கரித்துண்டு;
உடல் விட்ட பின்பு தவிப்பு;
கட்டை எடுத்தபின்பு விடுப்பு;
விஞ்ஞானமும் விடுகதையானது;
மரணத்தின் முன்.

மரணத்தின் மறுபக்கம் ஓலம்;
ஒடுங்கிடும் காலம்;
மரணத்தை மதித்திடு;
மனிதநேயத்துடன் இருக்கும் வரை வாழ்ந்திடு.

மரணத்தின் மறுபிறப்பு;
தானம் கண்தானம்;
மரணத்திற்குபின் மறையாது;
இருப்பது கண்தான்.

போகும் உடலிருந்து;
புதிய உடலுக்கள் புகுவதும் கண்தான்;
ஒளிகொடுப்போம்;
உயிர் சுமக்கும் உடலுக்கு..

உருவம் மாறினாலும்;
உயிருடன் இருப்பாய்;
மாற்று உடம்பில்.
வீற்றிடும் விழியாய்;
விடிந்திடும் புதிராய்;.
விழியைச் சுமந்து;
படைத்திடுவர் காவியம்.

கரிகிடும் கட்டைக்கு எதற்கு கண்;
கண்டிட வரட்டும்.,
கண் மூடிய பின்பும்,
மீட்டது வாழ்க்கை,


மறந்திட வேண்டாம் மனிதா
மரணத்திற்கு மிஞ்சியது எதுவும் இல்லை.

எத்தனை தானம் உண்டோ
அத்தனை தானத்தையும் செய்துவிடு.

ரத்ததானம் கண்தானம்;
இதயதானம்;
மண்தானம் பொன்தானம்..

மரணம் தன் மரண ஓலையை எழுவதற்கு முன்,
மண் உன்னை கூப்பிடும்முன்,
நெருப்பு உன்னை அணைக்கும் முன்,
கொடுத்திடு தானம்,
கொடையாளியாய் சென்றிடு,
வெல்வாய் மாரணத்தை இறந்தும்.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (20-Jun-21, 8:37 pm)
Tanglish : maranam
பார்வை : 2568

மேலே