சீர்திருத்தம் எப்போது

ஆணுக்குப் பெண்
சமம் என்ற
அர்த்தமுள்ள சீர்திருத்தம்
விளைவது எப்போ?

அடுக்களையில் ஆண்கள்
பெண்களை மாற்றுவது எப்போ?

பள்ளிக்கல்வியில்
பையன்களிடம்
சாதிப்பெயர் கேட்காதிருப்பதெப்போ?

நள்ளிரவில் நகைகளோடு
கன்னிப்பெண்கள்
நடுத்தெருவில் நடப்பதெப்போ?

சந்தை மதிப்பில்
டாலருக்கு நிகராக
நம்நாட்டுப்பணம் உயர்வதெப்போ?

சாக்கடை நீரில்
சாதிசெடியை வளர்க்கும்
சனியன்கள் ஒழிவதெப்போ?

கிராமம் தோறும்
சாலைகள் சென்று
பேருந்துகள் இயங்குவதெப்போ?

நதிகளெல்லாம்
நாட்டுடமை ஆகி
நாமல்லாம் குதுகளிப்பதெப்போ?

சர்க்கரையும் ரத்தஅழுத்தமுமில்லா
சத்தான வாழ்வு
வருவது எப்போ?

முட்டாளுக்கும் முதிர்ந்தஅறிவாளிக்கும்
ஒரேதேர்வு முறைஎன்ற
முறையற்றசெயல் முறிவதெப்போ?


கள்ளிப்பால் கொடுத்து
பெண் குழந்தைகளை
கொல்லா காலமெப்போ?

வரதட்சனை இல்லாது
வரன் பார்த்து
திருமணங்கள் நடப்பதெப்போ?

தோல்வி பயத்தால்
உயிர்தொலைக்கும் இளைஞர்களுக்கு
தன்னம்பிக்கை பிறப்பதெப்போ?

கவிஞர் புஷ்பா குமார்

எழுதியவர் : கவிஞர் புஷ்பா குமார் (21-Jun-21, 9:15 pm)
சேர்த்தது : மு குமார்
பார்வை : 330

மேலே