நினைவுகள்

நினைவுக்குவியல்கள் சிதறிக்கிடக்க
நித்திரை தொலைத்து நின்னையே
சுற்றி திரிகிறது மனசு ...

மனசெல்லாம் நிறைத்துவிட்டு
மறைந்து போனது ஏனோ ...

மறக்கமுடியாமல் மௌனமாய்
மனமது அசைபோடுகிறது
மகிழ்ந்திருந்த தருணங்களை ...

மரணம் ஆட்க்கொண்டு , மண் மூடும்
முன் வந்து மனம் அதை மகிழ்விக்க
மனமுவந்து மடை திறப்பாயா ...

மரணமும் மகிழ்வாய் மாறிவிடும்
மங்கை நின் வாய் திறந்து சொல்லும்
வார்த்தைகளாலே ....

இவன்
மகேஸ்வரன்.கோ (மகோ )
+91-98438 12650
கோவை -35

எழுதியவர் : மகேஸ்வரன்.கோ (மகோ ) (21-Jun-21, 9:37 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
Tanglish : ninaivukal
பார்வை : 146

மேலே