கோதாவரி நதிநீர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கோதா விரியென்னுஞ் கோதினதி நீரதனால்
வாதாதி முத்தோஷ வன்சினமும் - பேதாபே
தச்சொறியு முட்சிரங்குந் தாவு நளிர்ச்சுரமும்
இச்சகம்விட் டேகு மிசை

- பதார்த்த குண சிந்தாமணி

முத்தோடங்கள் நீங்கும், சொறிகள், உள்சிரங்கு, நடுக்கற் சுரம் ஆகியவை நீங்கும்

கோதாவரி (Godavari) இந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். இது கங்கை, சிந்து ஆறுகளுக்கு அடுத்து மிகப்பெரிய ஆறு ஆகும். இதன் நீளம் 1450 கி.மீ. ஆகும்.

கோதாவரி ஆறு இந்தியாவின் நடுப்பகுதியில் உள்ள முதன்மையான நீர்வழிகளில் ஒன்றாகும். இது மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள. திரிம்பாக் என்னுமிடத்தில் உற்பத்தியாகிறது; கிழக்கு நோக்கி தக்காண மேட்டுநிலத்தில் பாய்ந்து மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களை வளப்படுத்தி இராஜமுந்திரிக்கு அப்பால் இரண்டு கிளைகளாக பிரிகிறது.

வடபகுதி கிளைக்கு கௌதமி கோதாவரி என்றும் தென்பகுதி கிளைக்கு வசிஷ்ட கோதாவரி என்றும் பெயர். இரண்டு கிளைகளும் பெரிய வளமான கழிமுகத்தை உண்டாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தென் இந்திய ஆறுகளான கிருஷ்ணா, காவிரி போல் அல்லாமல் கோதாவரியின் கழிமுகம் கலங்கள் செல்ல உகந்தவை.

புதுச்சேரியின் ஒரு பகுதியான ஏனாம் இவ்வாற்றின் கழிமுகத்தில் உள்ளது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jun-21, 8:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே