என் காதலா

என் காதலா...
உனைக் கண்ட களைப்பில்
கண் அயர்கிறேன்...
காணும் களிப்பிலே
கண் விழிக்கிறேன்...
கனவிலும் உனையே
எண்ணித் தவிக்கிறேன்...
எவளோ ஒருவளாக
இருந்த நான் ,
இன்று உன்னுள்
எல்லாமுமாக இருக்கிறேன்...
உன்னாலேயே காதலியானேன்...
உன்னாலேயே கவிஞனுமானேன்...
உன் இதயக் கருவறையில்
முதல் குழந்தையுமானேன்...
உன் மனமெனும் வானில்
வெண்ணிலவுமாய் ஆனேன்...
உன் கண்களால் கைதாகி
கண்ணக் குழியில்
கரைந்தும் போனேன்...
-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (22-Jun-21, 11:21 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
Tanglish : en kaathalaa
பார்வை : 106

மேலே