சொல்லித்தான் செல்லாயோ செவ்விதழ் செல்வியிடம்
மெல்லத்தான் மேனியின் மீதுவீசும் மென்தென்றலே
சொல்லித்தான் செல்லாயோ செவ்விதழ் செல்வியிடம்
சொல்மன்னன் சுடர்க்கவிஞன் மணிக்கணக்காய் மாலையில்
பொல்லாக் கோவத்தில் காத்திருக்கிறான் என்று !
---ஒரே எதுகை நாலுசீர் நாலடி க வி
மெல்லத்தான் மேனியின் மீதுவீசும் தென்றலே
சொல்லித்தான் செல்லாயோ செவ்விதழ் செல்வியிடம்
சொல்மன்னன் காத்திருக்கி றான்மாலைத் தோட்டத்தில்
பொல்லாத கோவத்தில் என்று !
----ஒரு விகற்ப இன்னிசை வெண்பாவாக