சொல்லித்தான் செல்லாயோ செவ்விதழ் செல்வியிடம்

மெல்லத்தான் மேனியின் மீதுவீசும் மென்தென்றலே
சொல்லித்தான் செல்லாயோ செவ்விதழ் செல்வியிடம்
சொல்மன்னன் சுடர்க்கவிஞன் மணிக்கணக்காய் மாலையில்
பொல்லாக் கோவத்தில் காத்திருக்கிறான் என்று !

---ஒரே எதுகை நாலுசீர் நாலடி க வி

மெல்லத்தான் மேனியின் மீதுவீசும் தென்றலே
சொல்லித்தான் செல்லாயோ செவ்விதழ் செல்வியிடம்
சொல்மன்னன் காத்திருக்கி றான்மாலைத் தோட்டத்தில்
பொல்லாத கோவத்தில் என்று !

----ஒரு விகற்ப இன்னிசை வெண்பாவாக

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jun-21, 11:12 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 83

மேலே