காதல் போராட்டம்

வாசகர்களுக்கு ஓர் அன்பு மடல் ..!!

வலைத்தளம் எழுத்து.காம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம் ...
இந்த கவிதையை படைக்கும் முன்பு ...வாசகர்களுடன் எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ...
நான் கடந்த
02 .07 2020 அன்று என்னை வளையத்தளம் எழுத்து.காம் குடும்பத்தில்
இணைத்து கொண்டேன் ..

உங்களுடன் ஒருவருடமாக பயணம் செய்து வருகிறேன் .
நான் இலக்கணம் அறிந்த கவிஞன் அல்ல ..எனது எண்ணங்களின் தாக்கங்களை கவிதை வடிவில் உங்களின் வாசிப்புக்கு ..!!

எனது முதல் கவிதை "அனுபவம்" ....

"காதல் போராட்டம்"
என்ற இந்த கவிதை எனது 500 ஆவது கவிதை.

எனது படைப்புகளில் சில கவிதைகள் உங்களது பாராட்டுக்கு உகந்தவையாகவும், உயிரோட்டமாகவும் இருந்திருக்கும் .

சில கவிதைகள் "மொக்கையாக" மோசமான விமர்சனங்களை
பெறுவதில் முதன்மையானதாகவும் இருந்திருக்கும் .....

நீங்கள் எனக்கு கொடுக்கும் வரவேற்பு ..உற்சாகத்தை அளிக்கும்..
தொடர்ந்து உங்களுடன் பயணம் செய்ய விரும்பும் கலைஞன் ..
கோவை சுபா

காதல் போராட்டம்

நான் செங்கொடி ஏந்தி
பல போராட்டங்கள் நடத்தி
வெற்றி கண்டவன் ..!!

ஆனால்..
உன்னுடன் நடத்தும்
காதல் போராட்டத்தில்
வெள்ளை கொடி
ஏந்தி நிற்கிறேன் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (2-Jul-21, 11:59 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal porattam
பார்வை : 159

மேலே